Tuesday, April 30, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு திறந்த டாஸ்மாக் மதுக்கடைகள்

சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு திறந்த டாஸ்மாக் மதுக்கடைகள்

சென்னை

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. ஆனாலும் பொது மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், நோய் தோற்று தீவிரம் காரணமாகவும் சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. மேலும் வணிக வளாகங்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. முகக்கவசம் அணியாதவர்களுக்கு டோக்கன் மறுக்கப்பட்டுள்ளது.

இன்று டாஸ்மாக் திறக்கப்பட்ட நிலையில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை டாஸ்மாக்-களில் பெரிய அளவில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments