Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்மீண்டும் வேகம் எடுத்த கொரோனா - ஒரே நாளில் 639 பேருக்கு பாதிப்பு

மீண்டும் வேகம் எடுத்த கொரோனா – ஒரே நாளில் 639 பேருக்கு பாதிப்பு

சென்னை

தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக 500க்கும் குறைவான பாதிப்புகள் வந்தது. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை மீண்டும் 500ஐ தாண்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 480 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 634 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் பாதித்த 11, 224 பேரில் 4, 172 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 4 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments