Tuesday, March 28, 2023
Home உலகம் அமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்

அமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் நாளை பதவியேற்கிறார்.

துணை அதிபராக பதவியேற்பதையொட்டி, தான் வகித்து வந்த செனட் உறுப்பினர் பதவியை கமலா ஹாரிஸ் ராஜினாமா செய்துள்ளார்.

நாளை பதவியேற்பு விழா நடைபெறுவதையொட்டி, தலைநகர் வாஷிங்டன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து நாடாளுமன்ற கட்டிடம், அலுவலக கட்டிடங்கள், உச்ச நீதிமன்றம் ஆகிய பகுதிகளில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராணுவத்தினர் 25 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையை சேர்ந்த 4000 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாஷிங்டனில் ஏற்கனவே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகம் அருகே உள்ள பாலம் ஒன்றின் கீழ்பகுதியில் கூடாரங்களில் திடீரென நெருப்பு பற்றி எரிந்ததால் நாடாளுமன்ற வளாகம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மூடப்பட்டன. நெருப்பு அணைக்கப்பட்டாலும், அது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தமது பதவிக்காலம் நாளை நிறைவடைவதால், தனக்கு விடைகொடுக்க ராணுவ அணிவகுப்பு நடத்த வேண்டும் என டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ராணுவ தலைமையகமான பென்டகன் அதனை நிராகரித்துள்ளது.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments