ஆளும் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மியான்மரில் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகி கட்சி பெரும்பான்மை பெற்றது.ராணுவத்தின் ஆதரவுபெற்ற கட்சிகள் எல்லாம் தோல்வியை தழுவின
தேர்தலில் மோசடி நடைபெற்று இருப்பதாக ராணுவம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டுள்ளார்.