சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம்.
சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் அபராத தொகையை உயர்த்த முடிவு.
மாடு முதல்முறையாக பிடிக்கப்பட்டால் ₹5,000 அபராதம், மீண்டும் பிடிக்கப்பட்டால் ₹10,000 அபராதமாக வசூலிக்கப்படவுள்ளது.